விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த ‘ஆர்யன்’ படம். சில நாட்களுக்கு முன்பு அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப் பணிகளைத் தொடங்குவார்கள்.
அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் படம் குறித்து விஷ்ணு விஷால் கூறுகையில், “காலம் ஒரு நபரை சோதிக்கிறது என்று சொல்கிறார்கள். 34 மாதங்கள் அப்படித்தான் என்னை சோதித்தது. இந்த அக்டோபரில் எனது பலத்துடனும், எனது உள்ளார்ந்த சினிமாவுடனும் நான் திரும்பி வருகிறேன்.”

விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது நெருங்கிய நண்பர்களுக்காக ‘ஆர்யன்’ படத்தை திரையிட்டார். அவர்கள் அனைவரும் படத்தை மிகவும் பாராட்டியுள்ளனர். அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவாளராகவும், சாம் சிஎஸ் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். ‘ஆர்யன்’ படத்தின் பணிகளை முடித்த பிறகு, விஷ்ணு விஷால் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடிக்கவுள்ளார். அதை முடித்த பிறகு, அருண்ராஜா காமராஜ், சதீஷ் மற்றும் பிறரின் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.