லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தில் அமீர் கான் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியிருந்தாலும், சமூக ஊடகங்களில் அது ட்ரோல் செய்யப்பட்டது. அந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் ஆமிர் கான் நடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோ கதையை இயக்கப் போகிறார்.
இது தனது கனவுப் படம் என்றும் அவர் கூறியிருந்தார். ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்தி படத்தின் விளம்பர நிகழ்வில் அமீர் கான் இதை உறுதிப்படுத்தினார். “லோகேஷின் இயக்கத்தில் நான் நடிக்கவிருக்கும் படம் ஒரு பிரமாண்டமான சூப்பர் ஹீரோ கதையாக இருக்கும். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும்.”

ஆனால் இப்போது, படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ‘கூலி’ படத்திற்குப் பிறகு கார்த்தியின் ‘கைதி 2’ படத்தை இயக்கப் போவதாக லோகேஷ் கூறியிருந்தார். ஆனால் திடீரென லோகேஷ் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குவதால் ‘கைதி 2’ தாமதமாகும் என்று கூறப்பட்டது.
இந்த சூழலில், ஆமிர் கானின் படம் கிடப்பில் போடப்படுவதாக வெளியான செய்தி லோகேஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் தேதி பிரச்சினையா? அல்லது வேறு ஏதாவது? எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.