தன்னிடம் பொறுப்பில்லாமல் பேசிய சக நடிகையை நடிகை சிம்ரன் மறைமுகமாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை சிம்ரன் கூறியதாவது:- சமீபத்தில் சக நடிகைக்கு மெசேஜ் செய்தேன். உங்களை இப்படியொரு வேடத்தில் பார்த்தது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியிருந்தேன். உடனடியாக அவரிடமிருந்து பதில் வந்தது. ‘ஆன்ட்டி’ வேடங்களில் நடிப்பதை விட இதுவே சிறந்தது என்று கூறியிருந்தார்.

அவரிடமிருந்து இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை எதிர்பார்க்கவில்லை. எனது கருத்தை தெரிவித்திருந்தேன். அவளிடம் இருந்து எனக்கு நல்ல பதில் கிடைத்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். 25 வயது குழந்தைக்கு அம்மாவாக, அத்தை வேடங்களில் நடிப்பதில் தவறில்லை. பல வருடங்களுக்கு முன்பு ‘கண்ணத்தில் முத்தமிட்டால்’ படத்தில் அம்மாவாக நடித்தேன். டப்பா வேடங்களில் நடிப்பதை விட இது சிறந்தது என்று உணர்ந்தேன். நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும்,” என்றார் சிம்ரன்.
இதையடுத்து நடிகை சிம்ரன் யாரை குறிப்பிடுகிறார் என எக்ஸ் தளத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது. அந்த நடிகை ஜோதிகாவாக இருக்கலாம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். காரணம், சமீபத்தில் இந்தியில் ‘டப்பா கார்டெல்’ என்ற வெப் சீரிஸில் ஜோதிகா நடித்திருந்தார். அது தொடர்பான பேட்டியில் தென்னிந்திய சினிமா துறையை விமர்சித்திருந்தார். இதன் அடிப்படையில் சிம்ரன் பேசும் நடிகை ஜோதிகா என்று பலரும் கூறி வருகின்றனர்.