மதுரை: நேற்று மதுரையில் ரசிகர் மன்ற நிர்வாகியின் வீட்டு திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஷால், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு நான் பொறுப்பல்ல. நடிகர் சங்க தேர்தல் பிரச்சினை காரணமாக 6 மாதங்களில் முடிக்கப்பட வேண்டிய கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகள் தாமதமாகியுள்ளன.

தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இன்னும் நான்கு மாதங்களில் கட்டிடம் பெரியதாகிவிடும். இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையற்றது. இதைத் தவிர்க்கலாம். மக்களைப் பாதுகாக்கும் வீரர்கள் இறக்கும்போது அது வேதனை அளிக்கிறது. எல்லா நாடுகளுக்கும் எல்லைகள் உள்ளன. இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், போர் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.