தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி – 1 கட்டு
வெங்காயம் – 1
பூண்டு – 3-4 பல்
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 2
தக்காளி – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 2 தேக்கரண்டி
தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை – அலங்கரிக்க.

செய்முறை: ப்ரோக்கோலியை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவவும். வெங்காயம், பூண்டு, கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ப்ரோக்கோலி துண்டுகளை போட்டு வேகவிடவும். காய்கறிகள் அனைத்தும் நன்கு வெந்ததும் மிக்ஸியில் அரைத்து அடுப்பில் கொதி வந்ததும் உப்பு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.