சென்னை: அருகம்புல், ராகி அவல் லட்டு… அடுப்பில் வைத்து சமைக்காமல் அருகம்புல், ராகி அவல் வைத்து சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: அருகம்புல் – ஒரு கப், வெல்லம் – 100 கிராம், ராகி அவல் -100 கிராம், தேங்காய் துருவல் – ஒரு கப், பொட்டுக்கடலை – 50 கிராம் (கொரகொரப்பாக அரைத்தது), ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சுக்கு தூள் – சிறிதளவு.
செய்முறை: அருகம்புல்லை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ராகி அவலை நன்றாக கழுவி இரண்டு நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை மிக்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும். ராகி அவலில் உள்ள தண்ணீரை நன்றாக வடித்து விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பொடியாக நறுக்கிய அருகம்புல்லை தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் அரைத்த ராகி அவல், விழுதாக அரைத்த அருகம்புல், பொடித்த வெல்லம், தேங்காய் துருவல், பொட்டுகடலை, சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள், அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து லட்டாக பிடித்தால் அருகம்புல் ராகி அவல் லட்டு தயார்.