உணவுகளில் பிரியாணி என்றாலே பலருக்கும் முதன்மையான விருப்பமாக இருக்கும். ஆனால் அதைவிட சிலருக்கு சுடுசுடு சாதத்தில் மீன் குழம்பு ஊற்றி சாப்பிடும் ரசனை தான் மேலோங்கி இருக்கும். பிரியாணியிலேயே சில நேரங்களில் வைக்க முடியாத தனி டேஸ்ட் ஒன்று இந்த மீன் குழம்பில் உள்ளது. மீன் குழம்பு வகைகள் பல இருந்தாலும், அதில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும் ஒன்று வறுத்து அரைச்ச மசாலாவில் செய்யப்பட்ட மீன் குழம்பு தான். இந்த சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்பதைக் காணலாம்.

முதலில் சில முக்கியமான மசாலா பொருட்களை தயார் செய்ய வேண்டும். அதற்காக வரமல்லி, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை சற்று எண்ணெயில் வறுத்து, அதில் பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இவற்றை மிக்ஸியில் போட்டு, தண்ணீருக்குப் பதிலாக புளித் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வைக்க வேண்டும்.
தொடர்ந்து, மீன் குழம்பு செய்வதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு தாளிக்க வேண்டும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நன்றாக வதக்கி அதனுடன் அரைத்த மசாலாவையும் சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் கலந்து, குழம்பு கொதிக்க விட வேண்டும்.
மிக முக்கியமானது, குழம்பு கொதிக்கும்போது அது மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். ஏனெனில் கொதித்தவுடன் அது தானாகவே சற்றே நீர்த்துப் போய்விடும். இதனால் முந்தைய கட்டத்தில் குழம்பை அடர்த்தியாக வைத்தால், இறுதியில் சரியான அமைப்புடன் இருக்கும்.
மீனை குழம்பில் சேர்க்கும்போது, அடுப்பின் தீ மிதமானதாக இருக்க வேண்டும். மீனை போட்டவுடன் பாத்திரத்தை அடைத்துவிடாமல், காற்றோட்டத்துடன் மூடி வைக்க வேண்டும். இது மீன் உடையாமல் இருப்பதற்கும், நல்ல சமைப்புக்கும் உதவும். குழம்பு 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே கொதிக்கவேண்டும். அதற்கு மேல் கொதித்தால் மீன் உறைந்துவிடும்.
இவ்வாறு சிறிய சிறிய நுணுக்கங்களை கவனித்து செய்து பார்த்தால், வாசனைக்கே பசிக்க வைக்கும் ஒரு அட்டகாசமான வறுத்து அரைச்ச மீன் குழம்பு தயார். சாதம், இடியாப்பம், தொக்கு ரொட்டி, எதற்கும் இது சிறந்த ஜோடி. ஒரு முறை செய்து பார்த்து ருசித்தால், மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றும் வகையில் இருக்கும்!