சிக்கன் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பதற்கான உணவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சிக்கன் குழம்பு எப்போதும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். உங்கள் சிக்கன் குழம்புக்கு கூடுதல் சுவை மற்றும் வாசனை வேண்டுமா? அப்போது இந்த மசாலா பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து சமைத்துவிடுங்கள். சிக்கன் குழம்பு மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி உண்ணும் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- தனியா (100 கிராம்)
- சிவப்பு மிளகாய் (25 கிராம்)
- மிளகு (2 டீஸ்பூன்)
- சீரகப் பொடி (2 டீஸ்பூன்)
- சோம்பு (2 டீஸ்பூன்)
- அரிசி (2 டீஸ்பூன்)
- ஏலக்காய் (1 டீஸ்பூன்)
- மஞ்சள் (1 டீஸ்பூன்)
- கசகசா (1 டீஸ்பூன்)
- கறிவேப்பிலை (சிறிதளவு)
- பிரிஞ்சு இலை (2)
- ஸ்டார் பூ (1)
- பட்டை (1 இஞ்ச்)
- கிராம்பு (5)
- கல் பாசி (சிறிதளவு)
- கருப்பு ஏலக்காய் (2)
- கல் உப்பு (1 டீஸ்பூன்)
செய்முறை: முதலில், காய்ந்த மிளகாயைத் தவிர, மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கடாயில் எண்ணெய் இல்லாமல் லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். அந்த பொருட்கள் வெப்பம் தங்கும் அளவுக்கு வறுத்த பிறகு, அவற்றை ஒரு பெரிய தட்டில் விட்டு காயவிடுங்கள். பிறகு, அவற்றை மிக்ஸியில் போட்டு மிக நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை வெப்பம் போக காய வைத்து, காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துவிடுங்கள்.
இந்த பொடியை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். இப்போது, சிக்கன் குழம்பில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை சேர்த்தால், உங்கள் சிக்கன் குழம்பு மிக சிறந்த சுவையுடன் இருப்பது உறுதி.