தொழில்முனைவோர் கௌரவ் பஹிர்வானி இதை அறிவித்துள்ளார். கிரிக்கெட் உலகம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவங்களில் இயங்கி வரும் நிலையில், இப்போது நான்காவது முறையாக ஒரு புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “டெஸ்ட் ட்வென்டி” என்று பெயரிடப்பட்ட இந்த புதிய வடிவம், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆழமான உத்திகளையும் டி20 கிரிக்கெட்டின் அசுர வேகத்தையும் ஒரே நாளில் இணைக்கும் ஒரு புதுமையான முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதில், அணிகள் தலா 20 ஓவர்கள் கொண்ட 4 இன்னிங்ஸ்களை விளையாடும். போட்டிகள் வெள்ளை உடையில் சிவப்பு பந்துடன் விளையாடப்படும். இது ஒரே நாளில் நடைபெறும். போட்டியில் இரண்டு வடிவங்களையும் சிறப்பாக ஒருங்கிணைக்க சில விதி மாற்றங்கள் செய்யப்படும். ஒவ்வொரு அணியும் ஒரு போட்டிக்கு ஒரு முறை 4 ஓவர்கள் பவர்பிளேவை வைத்திருக்கலாம். முதல் இன்னிங்ஸில் அவர்கள் 75 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்றால், ஃபாலோ-ஆன் செயல்படுத்தப்படலாம்.

போட்டி முழுவதும் அதிகபட்சமாக 5 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தலாம். மேலும் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் அதிகபட்சமாக 8 ஓவர்கள் வீசலாம். இந்த வடிவத்தை அறிமுகப்படுத்தும் போது, டெஸ்ட் டி20யின் நிறுவனர் கௌரவ் பஹிர்வானி கூறினார்; “இன்றைய தலைமுறை விரும்பும் அனைத்தையும் வழங்கும் ஒரு வடிவத்தை உருவாக்க நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டையும் டி20யையும் இணைத்துள்ளோம்.”
இதன் ஆலோசனைக் குழுவில் ஏபி டிவில்லியர்ஸ், கிளைவ் லாயிட், மேத்யூ ஹேடன் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் அடங்குவர். இந்த FORMAT 13-19 வயதுக் குழுவை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.