இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிலவும் பதற்றமான சூழ்நிலையை மையமாகக் கொண்டு, 2025 ஐபிஎல் தொடரின் நிலைமை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதுகாப்பு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, தொடரும் போட்டிகள் நடைபெறுமா அல்லது இடைநிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா இந்தச் சூழ்நிலையில் எந்தக் கூட்டமும் நடக்கவில்லையென விளக்கம் அளித்தார்.ஐபிஎல் தலைவர் அருண் துமால், அரசாங்கத்திடம் இருந்து எந்த உத்தரவும் கிடைக்கவில்லை என்றும், சூழ்நிலையை மதித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், லக்னோவில் நடைபெறவுள்ள ஆட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கூறினார்.
பாதுகாப்பு சூழ்நிலை குறித்து வெளிநாட்டு வீரர்களும் பதற்றத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது, ஐபிஎல் தொடரை வேறு நாட்டுக்கு மாற்றும் வாய்ப்பை எழுப்பியுள்ளது. தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் மாற்று இடமாக கருதப்படலாம்.பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பிஎஸ்எல் தொடரும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மை சூழ்நிலையில் பிசிசிஐ எவ்வாறு செயல்படப்போகிறது என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சூழ்நிலையில், விளையாட்டு தொடருக்கான பாதுகாப்பு முன்னுரிமையாக கருதப்பட வேண்டிய நேரத்தில் பிசிசிஐ எடுத்த முடிவுகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன.நாடுமுழுவதும் ரசிகர்கள், IPL தொடரின் நிலையை பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.