முலான்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தானை அதிக வெற்றிக்கு வழிவகுத்த கேப்டன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். ஐபிஎல்-2025 சீசனின் 18-வது போட்டி நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. இதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி 32-வது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம், ராஜஸ்தானை அதிக வெற்றிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
இதற்கு முன், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஷேன் வார்னே, 31 போட்டிகளில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.