பாரீஸ்: பாரிஸில் நடந்த ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசால் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் 2 பதக்கங்களை வென்றனர். துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் மனு பகர் வெண்கலமும், கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாகர் மற்றும் சரப்ஜோத் சிங் வெண்கலமும் வென்றனர்.
தற்போது இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3வது பதக்கம் கிடைத்துள்ளது. 50 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசல் 451.4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆக உள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா 41வது இடத்தில் உள்ளது.
பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்
வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.