மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா கூறியதாவது:- முதல் 2 போட்டிகளிலும் தோற்றோம். இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பினோம். இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதுவும் சொந்த மண்ணில் நடந்த போட்டியில் அனைவரும் ஒரு அணியாக ஒத்துழைத்த விதத்தை பார்க்கும் போது, இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் ஒரு வீரரை தேர்வு செய்வது மிகவும் சவாலானது.

இந்த ஆடுகளத்தை கருத்தில் கொண்டு, அறிமுக வீரர் அஸ்வனி குமார் நன்றாக பந்து வீசுவார் என நினைத்தோம். நாங்கள் ஒரு பயிற்சி போட்டியில் விளையாடியபோது, அஸ்வனி குமார் தாமதமாக ஸ்விங் மற்றும் அற்புதமான லைன் மற்றும் லென்த் பந்துகளை வீசினார். அஸ்வனி குமார் ஒரு தனித்துவமான அதிரடி மற்றும் சிறந்த இடது கை பந்துவீச்சாளர். ஆந்த்ரே ரசல் விக்கெட்டை அவர் வீழ்த்திய விதம் அற்புதம். அதேபோல் குயின்டன் டி காக் கொடுத்த கேட்சை அவர் எடுத்து ஆட்டமிழந்த விதம் அற்புதம். இவ்வாறு அவர் கூறினார்.