கொழும்பு: இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இதில், இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று கொழும்பில் உள்ள பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது.

ஸ்மிருதி மந்தனா 101 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். பிரதிபா ராவல் 30, ஹர்லீன் தியோல் 47, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 41, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44, தீப்தி சர்மா 20 ரன்கள் எடுத்தனர். 343 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3 நாடுகள் கோப்பையை வென்றது. விளம்பரம் இலங்கை அணிக்காக கேப்டன் சமரி அட்டப்பா அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். இந்தியா அணிக்காக, ஸ்னே ராணா 4 விக்கெட்டுகளையும், அமன்ஜோத் கவுர் 3 விக்கெட்டுகளையும், சரணி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும், தொடரின் கேப்டனாக சினே ராணாவும் தேர்வு செய்யப்பட்டனர்.