வடோதரா: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடோதராவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 38.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சினெல்லே ஹென்றி 61 ஓட்டங்களையும், ஷமைன் காம்ப்பெல் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பெண்கள் அணி தரப்பில் தீப்தி சர்மா 6 விக்கெட்டுகளையும், ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 28.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 32, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29, பிரதிகா ராவல் 18, ஸ்மிருதி மந்தனா 4, ஹர்லீன் தியோல் 1 ரன் எடுத்தனர்.

தீப்தி சர்மா மற்றும் ரிச்சா கோஷ் முறையே 39 மற்றும் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் 211 ரன்களாலும், இரண்டாவது போட்டியில் 115 ரன்களாலும் வெற்றி பெற்றது.