அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இந்த போட்டியின் போது, குஜராத் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் 12 ரன்களை கடந்தபோது ஐபிஎல் தொடரில் 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

அவர் தனது 117-வது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஐபிஎல் வரலாற்றில் 4,000 ரன்களை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஆவார். மிகக் குறைந்த பந்துகளில் 4,000 ரன்களை எட்டிய மூன்றாவது வீரர் ஜோஸ் பட்லர் ஆவார். அவர் 2,677 பந்துகளில் 4,000 ரன்கள் எடுத்தார். கிறிஸ் கெய்ல் (2,653) மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் (2,658) ஆகியோர் இந்தப் பிரிவில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.