ஐதராபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், நடப்பு ஐபிஎல் சீசனின் 19-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 17 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். இந்த சீசன் தொடங்கும் முன் சிராஜ் பல சோதனைகளை எதிர்கொண்டார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் அவரை தக்கவைக்க தவறியது. இதுபற்றி வெளிப்படையாகவும் பேசியிருந்தார். அவர் தனது உரையில் சிறப்பாக பந்துவீச முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். இப்போது அதை களத்தில் செய்திருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதை வென்ற சிராஜ் கூறியதாவது:- எனது சொந்த ஊரில் விளையாடுவது எப்போதுமே சிறப்பு, எனது குடும்பத்தினர் இந்த ஆட்டத்தை பார்க்க வந்தனர். இது எனக்கு உத்வேகத்தை அளித்தது. நான் RCBக்காக 7 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எனது பந்துவீச்சில் கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன். அது எனக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் நான் இடம்பெறமாட்டேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால் என்னால் முடியும் என்ற நம்பிக்கையில் பயிற்சி எடுத்தேன். நான் எங்கே தவறு செய்கிறேன் என்பதை அறிந்து அதை சரிசெய்தேன். நான் எனது பந்துவீச்சை ரசிக்கிறேன். ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடும்போது, என் மனதில் ஒரு சந்தேகம். நான் அணியில் இருந்து நீக்கப்படுவேனா என்பது தான்.
இருப்பினும், எனக்கு அது நடந்தபோது, நான் உற்சாகமடைந்தேன். ஐபிஎல் சீசனுக்காக காத்திருந்தேன். உள்ளேயும் வெளியேயும் பந்தை வீசும்போது வித்தியாசமான உணர்வைப் பெறலாம்” என்றார். சிராஜ் தற்போது 4 ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.