மும்பை: காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் உடற்பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பிசிசிஐ பும்ராவுக்கு உடற்தகுதி சான்றிதழை வழங்கியுள்ளது. அவர் விரைவில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் பும்ரா இரண்டு பயிற்சி ஆட்டங்களுக்குப் பிறகு 13-ம் தேதி டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. பும்ராவின் வருகை அணியின் பந்துவீச்சு பலத்தை அதிகரிக்கக்கூடும்.