2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை கைப்பற்றி பெரும் சாதனை செய்துள்ளது. தொடக்கத்திலிருந்தே தெறிக்கவிட்ட அந்த அணி இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கடந்த 17 ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த ஆர்சிபிக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். இதன்மூலம் அதிக வருடங்களாக எதிர்பார்த்த வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் நடந்துவரும் விமர்சனங்களுக்கும் ஆர்சிபி பதிலடி கொடுத்துள்ளது.

இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி தேர்வு செய்த தரமான வீரர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதுகுறித்து அணி இயக்குனர் மோ போபட் உருக்கமாக பேசியுள்ளார். “இந்த வெற்றி உணர்வை வாழுங்கள். ஏனெனில் இது தொடக்கமே. இதே வீரர்களை வைத்தே 2026ல் மீண்டும் கோப்பையை வெல்வோம்” என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (2019, 2020) மட்டுமே இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துள்ளன. அதே சாதனையை ஆர்சிபி இப்போது நோக்குகிறது. “அடுத்த ஆண்டு பெங்களூருவில் இறுதிப்போட்டி நடைபெறும். மீண்டும் அங்கே சென்று கோப்பையை வெல்ல வேண்டும். இந்த வெற்றியின் உணர்வை அடுத்த ஆண்டுக்கான பசியாக மாற்றுங்கள்” என்று வீரர்களை உந்தினார்.
இவ்வாறு 18 ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிய விராட் கோலி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களை மகிழ்ச்சி ஆழத்தில் இழுத்துள்ள நிலையில், ஆர்சிபி அணி அடுத்த ஆண்டு கோப்பையை தக்க வைக்கும் சக்தியை தருமா என்பதை எதிர்பார்த்து காத்திருக்கலாம்.