சென்னை: 16 அணிகள் பங்கேற்கும் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு டி20 கிரிக்கெட் தொடர் சென்னை அருகே கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆர்எம்கே பொறியியல் கல்லூரி அணி, சாய்ராம் பொறியியல் கல்லூரியை 117 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ஆர்எம்கே அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சாய்ராம் அணி 19.5 ஓவர்களில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இதையடுத்து ஆர்எம்கே கல்லூரி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் லயோலா அணி, சத்யபாமா பல்கலைக்கழக அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த சத்யபாமா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய லயோலா அணி 13.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வரும் 15-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்எம்கே அணியும் லயோலா அணியும் மோதுகின்றன.