மும்பை: ஐபிஎல் தொடரில் புதிய சாதனையை செய்து அனைவரின் வாயை அடைத்துள்ளார் ரோகித் சர்மா. ஆமாங்க 6000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் ரோஹித் சர்மா சற்று தடுமாறி வந்தாலும் பின்னர் பார்முக்கு திரும்பினார். அதன் தொடர்ச்சியாக இன்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார்.
அத்துடன் மும்பை அணிக்காக 6000 ரன்களை கடந்து புதிய சாதனையையும் ரோஹித் படைத்துள்ளார். ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு(8447) அடுத்த இடத்தில் ரோகித் உள்ளார்.
தன்னை பற்றிய அனைத்து விமர்சனங்களையும் உடைத்து நொறுக்கி விட்டார் ரோஹித் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.