கடந்த சில தொடர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி மோசமான பேட்டிங் பார்மில் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக பிசிசிஐ அவர்களது எதிர்காலத்தை பற்றி முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளது. இருவரும் எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம் பெறலாமா என்பதற்கான முடிவுகள் தற்போது செய்யப்படுவதாகவும், இது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பங்கேற்கும். இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறவில்லை எனில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடும் அழுத்தத்தை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. குறிப்பாக, ரோகித் சர்மா மிக மோசமாக பாதிக்கப்படுவார். ஏனெனில் அவர் தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் உள்ளார், மேலும் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டால், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியபடி, “கடந்த முறையில் நாங்கள் மீட்டிங்கில் பேசியபோது, ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து நிறைய ஆலோசித்து விட்டோம். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்தார். இந்திய அணியின் நிர்வாகம் அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான சில திட்டங்களை வகுக்க இருப்பதால், அதில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இப்பொழுது விராட் கோலிக்கு எந்த விதமான நெருக்கடியும் இல்லை, ஏனெனில் ஆஸ்திரேலிய தொடரில் அவர் ஒரு சதம் அடித்திருந்தார். அதேபோன்று, ஒருநாள் போட்டிகளிலும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ரோகித் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் இருப்பதால், அவர் வெளியேற்றப்படுவது அதிக வாய்ப்பாக இருக்கிறது என்று அந்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார்.