பீஜிங்: செங்டு ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிலி வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, சிலி நாட்டின் அலெஜாண்ட்ரோ டபிலோ உடன் மோதினார்.
இதில் டபிலோ முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்டு ஆடிய லாரன்சோ முசெட்டி 2வது செட்டை 6-2 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 7-6 (7-5) என வென்று சிலி வீரர் டபிலோ சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் டபிலோவுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.