துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசையில், ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஜா முதலிடத்தை பிடித்துள்ளார்.
302 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலிருந்து முன்னேறிய ராஜா, முதல்முறையாக ‘ஆல்-ரவுண்டர்’ பட்டியலில் நம்பர்-1 ஆனார். இதனால், ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா உமர்சாய் (296 புள்ளி) இரண்டாம் இடத்திற்கும், முகமது நபி (292) மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டனர்.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், ராஜா ‘ஆல்-ரவுண்டராக’ மிளிர்ந்தார். அவர் 151 ரன்கள் எடுத்ததோடு, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் விளைவாக, பேட்டர் தரவரிசையில் 22வது இடத்துக்கும், பவுலர் தரவரிசையில் 38வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.
சிக்கந்தர் ராஜா, ஐ.சி.சி. தரவரிசையில் நம்பர்-1 இடத்தை பிடித்த இரண்டாவது ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு, ஆன்டி பிளவர் மட்டுமே அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.