இந்திய டெஸ்ட் அணியில் கேப்டனாக கில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அணியில் இருக்கும் ரிஷப் பண்ட் கேப்டனாக வாய்ப்பு பெற முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கில் மற்றும் பண்ட் ஆகிய இருவரின் பிராண்ட் மதிப்பு மற்றும் சொத்து நிலையைப் பார்க்கலாம்.சுப்மன் கிலின் 2024 சொத்து மதிப்பு சுமார் 34 கோடி ரூபாய்.
குஜராத் டைட்டன்ஸ் அணியால் 16.5 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட அவர், பிசிசிஐ ஏ கிரேட் ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 5 கோடி சம்பளம் பெறுகிறார். கில், நைக், ஜில்லெட், கோகோ-கோலா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் 50-60 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். எம்ஆர்எஃப் ஒப்பந்தம் வாயிலாக சச்சின், கோலி, லாரா போன்றோர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.

கிலின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 11 மில்லியனை தாண்டியுள்ளது. அவர் பஞ்சாபில் வீடு, ரேஞ்ச் ரோவர் போன்ற வாகனங்களை வைத்துள்ளார். மறுபுறம், ரிஷப் பண்ட், 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இளம் வயதில் செல்வந்தர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் 2025 ஏலத்தில் லக்னோ அணியால் 27 கோடிக்கு வாங்கப்பட்ட பண்ட், ஐபிஎல் வரலாற்றில் மிக உயர்ந்த தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
பிசிசிஐ ஏ கிரேட் ஒப்பந்தம் வாயிலாக ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் தனி போட்டிகளுக்கான தொகைகளும் பண்ட் பெறுகிறார். ட்ரீம்11, அடிடாஸ், பூஸ்ட் உள்ளிட்ட 15 பிராண்டுகளுடன் இணைந்துள்ளார். ஒவ்வொரு ஒப்பந்தத்துக்கும் 3.5-4 கோடி வரை சம்பளம் பெறும் பண்டின் பிராண்ட் மதிப்பு 15 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது அடுத்த ஆண்டு மேலும் 30-40% அதிகரிக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.அவர் ஆடி A8, ஃபோர்டு மஸ்டாங் ஜிடி போன்ற கார்கள் மற்றும் டெல்லி, ரூர்கி ஆகிய இடங்களில் கோடிக்கணக்கான வீடுகளும் வைத்துள்ளார். எனவே, தற்போது கிலும் பண்டும் இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட்டின் பிராண்ட் மற்றும் பணத்தின் சிகரங்களை தொட்டுள்ளனர்.