துபாய்: நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ‘சூப்பர் 4’ சுற்று போட்டி கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. இதில், பந்துவீசிய இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி தனது முதல் 8 பந்துகளில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதன் பிறகு, அவர் வீசிய 16 பந்துகளில் வெறும் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில், இந்த போட்டிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வருண் பகிர்ந்து கொண்டார். “பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் ஒரே குறிக்கோள். பந்தை சரியான இடத்தில் வீசி சிறிது திருப்புவதே எனது வேலை.

அந்த ஒரு பந்தை வீச முயற்சிப்பேன். நான் அதில் ரன்கள் கொடுத்தாலும், தாக்குதல் பாணியில் பந்து வீசுவேன், விக்கெட்டுகளை எடுக்க முயற்சிப்பேன். ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து நிறைய சறுக்குகிறது. பவர்பிளே முடிந்ததும், மைதானத்தில் மைதான அமைப்பு விரிவடைகிறது. அது எங்களுக்கு இன்னும் சிறப்பாக அமைகிறது. கடந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு, நான் டிஎன்பிஎல் கிரிக்கெட் விளையாடினேன்.
அப்போதிருந்து, நான் நிறைய பயிற்சி செய்து வருகிறேன். இப்போது எனது பேட்டிங் மற்றும் பீல்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன்,” என்று அவர் கூறினார். வருண் நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் அவரது எகானமி ரேட் 6.80 ஆகும்.