நேற்று சேலத்தில் நடைபெற்ற TNPL T20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன்களான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்க சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபராஜித் அதிகபட்சமாக 38 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் எடுத்தார். சுனில் கிருஷ்ணன் 32, விஜய் சங்கர் 26, ஸ்வப்னில் சிங் 20 ரன்கள் எடுத்தனர். திண்டுக்கல் அணிக்காக வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

181 ரன்கள் என்ற இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பாபா இந்திரஜித் அதிகபட்சமாக 43 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 46 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார்.
கடைசி 3 ஓவர்களில் திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. லோகேஷ் ராஜ் வீசிய இந்த ஓவரில், ஹனி ஷைன் (7), பாபா இந்திரஜித் (73), மற்றும் விமல் குமார் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இந்த ஓவர் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும், இந்த ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. அடுத்த ஓவரை வீசிய தன்வர் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
லோகேஷ் ராஜ் வீசிய கடைசி ஓவரில், திண்டுக்கல் அணி 2 விக்கெட் இழப்புக்கு 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி தோல்வியின்றி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.