ர

ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்பதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பெயரும் வரவாக இருந்தாலும், அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது.பிசிசிஐ வட்டாரங்களில் ஜெய்ஸ்வாலின் நடத்தை தான் முக்கியமான தடையாக உள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரராக இருந்தாலும், அவரது ஒழுங்கு மீறல் கேப்டனாகும் வாய்ப்பை பாதித்திருக்கிறது.மும்பை அணிக்காக விளையாடிய போது அவர், கேப்டன் ரஹானே உடன் மோதலுக்கு சென்றதாக தகவல். ரஞ்சி டிராபியில் நடந்த போட்டிகளில் எதிரணி வீரரை திட்டியதும், பையின் மீது கால் வைத்ததும் சர்ச்சை எழுப்பியது.

இந்த சம்பவங்களை தொடர்ந்து அவர் மும்பை அணியிலிருந்து விலகி, கோவா அணியில் சேர்ந்தார். இது அவரது கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தை காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது.தற்போது ஜஸ்பிரித் பும்ரா, சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் கேப்டன் பதவிக்குப் பரிசீலனையில் உள்ளனர். இதில் சுப்மன் கில் முன்னிலையில் இருக்கிறார்.
கம்பீரின் ஆதரவும் அவருக்கே இருக்கிறது. டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் துணை கேப்டனாக இருந்த அனுபவமும் அவருக்கு பலமாக அமைகிறது.ஜெய்ஸ்வால் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவரது கோபம், குழு ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்படுகிறது.இந்திய அணிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது திறமை மட்டும் அல்ல. ஒழுக்கமும், பொறுமையும் தேவைப்படும்.ரஹானேவின் மீதான அவமதிப்பு, அணியின் ஒழுங்கை பாதிக்கக் கூடும் என்பதாலேயே, அவருக்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.