புதுடில்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித் களம் இறங்கினார்கள். இந்த தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார், பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றார்.

ஜங்புரா தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில், மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டார். இதில், மணீஷ் சிசோடியா 600 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இத்தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜூம், பா.ஜ., சார்பில் ஷிகா ராயும் போட்டியிட்டனர். இதில் ஷிகா ராய் 49,594 ஓட்டுகளை பெற்று, 3,188 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மால்வியா நகர் தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில், மூத்த தலைவர் சோம்நாத் பாரதி போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் சதீஷ் உபாத்யாய் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜிதேந்திர குமார் கோச்சார் போட்டியிட்டனர். இதில் பா.ஜ., வேட்பாளர் சதீஷ் உபாத்யாய் 9,205 ஓட்டுகளை பெற்றார். ஆம்ஆத்மி வேட்பாளர் சோம்நாத் பாரதி 7,805 ஓட்டுகளை பெற்றார்.
கல்காஜி தொகுதியில், தற்போதைய டில்லி முதல்வர் அதிஷி ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும், பா.ஜ., சார்பில் முன்னாள் எம்.பி., ராமேஷ் பிதூரியும் போட்டியிட்டனர். இதில், அதிஷி வெற்றி பெற்றார்.
சத்தர்பூர் தொகுதியில், ஆம்ஆத்மி சார்பில் பிரம் சிங் தன்வார் போட்டியிட்டார். பா.ஜ., சார்பில் கர்தார் சிங் தன்வார் மற்றும் காங்கிரஸ் சார்பில் ராஜேந்தர் சிங் தன்வார் போட்டியிட்டனர். இதில், பா.ஜ., வேட்பாளர் கர்தார் சிங் 22,658 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், பல தொகுதிகளில் ஆம்ஆத்மி தலைவர்கள் தோல்வி அடைந்தாலும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலு செலுத்தியுள்ளன.