மும்பை: பாலிவுட் நடிகர்கள் பலர் மதுபான தொழிலில் நுழைந்து கோடிகளை சம்பாதித்து வருகின்றனர். இவர்களில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் ஷில்பா ஷெட்டியும் அடங்குவர். ஷாருக்கான் தனது மகன் ஆர்யன் கான் பெயரில் டியவோல் என்ற ஓட்கா நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஆர்யன் கான் மும்பையிலும் பார் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஷாருக்கான் குடும்பம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறது. பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் இணைந்து வில்லா ஒன் என்ற விஸ்கி பிராண்டை 2019-ல் தொடங்கினார்.
இதன் மூலம் அவர் ஆண்டுக்கு 100 கோடி வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனின் கணவரும், பாலிவுட் நடிகருமான ரன்வீர் சிங் ஏபிடி என்ற மதுபான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். மதுபான விளம்பரங்களில் நடிக்காவிட்டாலும் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து ஆண்டுக்கு ரூ.30 கோடி வரை சம்பாதிக்கிறார்.
மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான சஞ்சய் தத் தமிழில் விஜய் நடித்த லியோ படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு கிளென்லிவெட் என்ற ஸ்காட்ச் விஸ்கி பிராண்டை அறிமுகப்படுத்தினார். அவரும் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். எந்திரன் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் டேனி டென்சோங்பா, யுக்செம் ப்ரூவரீஸ் என்ற பீர் நிறுவனத்தை வைத்துள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி லாபம் ஈட்டுவதாக கூறியுள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து வோட்கா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.