2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய விமான விபத்து நடைபெறும் என்று ஜோதிடர் ஷர்மிஸ்தா தனது எக்ஸ் தளத்தில் ஒரு வாரத்திற்கு முன்பே துல்லியமாக பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்தே காலை புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் சில நிமிடங்களுக்குள் விமான நிலையம் அருகே உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் 242 பயணிகளும் பணியாளர்களும் இருந்தபோது ஒருவரைத் தவிர மற்றவர்கள் உயிரிழந்தனர்.
விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். வெடித்த எரிபொருளின் தீயால் உயிர் பிழைக்க முயற்சி தோல்வியடைந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். விமானம் அகமதாபாத் விமான நிலையத்தின் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு மேலெழும்ப முடியாமல் தாழ்வாக பறந்து விபத்து ஏற்பட்டது.
ஜோதிடர் ஷர்மிஸ்தா கடந்த டிசம்பரில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததன் படி, 2025ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்து துறையில் சிறப்பு முன்னேற்றங்கள் இருப்பினும், விமான விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் செய்திகள் வரும் என அவர் கணித்திருந்தார். அவர் குறிப்பிட்டதாவது, “குரு மிதுன ராசியில் மிருகசீரிஷம் மற்றும் ஆர்த்ராவின் மிதுன பகுதியில் மாதத்திற்கு சுமார் 6.5 டிகிரி வேகத்தில் இருக்கும்போது விமானப் போக்குவரத்து செழிக்கும், ஆனால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், ஜூன் 5-ஆம் தேதி அவர் மற்றொரு பதிவில், “டாடா நிறுவனம் ஹைதராபாத்தில் ரஃபேல் விமான உடற்பகுதியை உருவாக்கும். இஸ்ரோ விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் பொறியியல் மற்றும் விண்வெளி சுற்றுலாவில் உலகை ஆச்சரியப்படுத்தும். கடந்த ஆண்டு நட்சத்திர நகர்தலின் மூலம் இந்த கணிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் விமான விபத்து நடக்கும் என எனது கணிப்பில் உறுதியாக இருக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஜோதிடர் பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி, நெட்டிசன்கள் அதனைப்பற்றி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இவ்வாறு முன்னறிவிப்பு அளித்த இந்த விபத்து, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு மேலாண்மையின் அவசியத்தை மீண்டும் ஒரு முறை வெளிக்கொள்ளச் செய்துள்ளது.