ராஞ்சி: இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு, 1996-ல் உருவாக்கப்பட்டு, இளைஞர்களை விமானப்படையில் சேர ஊக்குவிக்கவும், ஆயுதப்படை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏரோபாட்டிக் காட்சிகளை நடத்தி வருகிறது. இந்த குழு நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள நாம்கும் ராணுவ மைதானத்தில் ஏரோபாட்டிக் காட்சியை நடத்தியது.

இதில் 6 விமானங்கள் வானில் மிக அருகில் பறந்து ஏரோபாட்டிக் காட்சிகளை நிகழ்த்தின. இந்த நிகழ்ச்சியில் விமானப்படைத் தளபதி ஏ.பி.சிங் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். வரும் 23-ம் தேதி பாட்னாவில் கண்காட்சி நடைபெற உள்ளது.