புதுடில்லி: ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோயாளிகள் பயன்படுத்தும் இன்ஹேலர் கருவிகளில் உள்ள சில வாயுக்கள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வாயுக்கள் ஆண்டுக்கு 5.30 லட்சம் பெட்ரோல் கார்கள் ஏற்படுத்தும் கார்பன் உமிழ்வுடன் ஒப்பிடத்தக்க அளவாக காற்று மாசை உண்டாக்குகின்றன.

ஆஸ்துமா நோயாளர்கள் மருந்தை சுவாச பாதையில் உள்ளிழுக்க ‘மீட்டர்-டோஸ் இன்ஹேலர்’ மற்றும் ‘சாப்ட் மிஸ்ட் இன்ஹேலர்’ போன்ற கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். இதில், ஹைட்ரோபுளோரோஅல்கேன் வாயு மருந்தை நுரையீரலுக்கு எளிதாக கொண்டு செல்ல உதவுகிறது. ஆனால் இந்த வாயு சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கலிபோர்னியாவின் பல்கலைக்கழக நுரையீரல் நிபுணர் டாக்டர் வில்லியம் பெல்ட்மேன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த 10 ஆண்டுகளில் இன்ஹேலர்கள் வெளியிட்ட மாசுவில் 98 சதவீதமும் ஹைட்ரோபுளோரோஅல்கேன் வாயுக்களால் ஏற்பட்டுள்ளது என கண்டறியப்பட்டது. இது, 2.50 கோடி மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வுக்கு சமமானது மற்றும் ஆண்டுக்கு அமெரிக்காவில் 5.30 லட்சம் பெட்ரோல் கார்கள் உமிழும் கார்பன் டை ஆக்சைடுக்கு இணையானதாகும்.
பிற வகை இன்ஹேலர்களில் இத்தகைய வாயுக்கள் இல்லை. நோயாளர்கள் அவற்றை பயன்படுத்தினாலும் சுற்றுச்சூழலுக்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதனால் மருத்தவர்கள் சூழலுக்கு உகந்த இன்ஹேலர்களை பரிந்துரைக்க வேண்டும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் பாதுகாப்பானது என ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது