புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எல்லையோர மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லையோர 10 மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அமித்ஷா இந்த ஆலோசனையை நடத்தியுள்ளார். கூட்டத்தில், டிஜிபிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களும் பங்கேற்றனர். எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அமித்ஷா தனது பதிவில், “பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது” என கூறியுள்ளார்.