புது டெல்லி: சுதந்திர தினத்தை ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. இந்த சூழலில், மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று ‘எக்ஸ்’ இணையதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:-
வீடு வீடாக மூவர்ணக் கொடி பிரச்சாரத்தின் கீழ் எனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றினேன். பிரதமர் மோடியின் தலைமையில் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், இன்று தேசத்தை ஒற்றுமையின் நூலில் பிணைத்து, தேசபக்தியை வலுப்படுத்தும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

இந்தப் பிரச்சாரம், நாட்டின் 140 கோடி மக்களும் எண்ணற்ற சுதந்திரப் போராளிகள் தங்கள் தியாகம், தவம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அடைந்த சுதந்திர இந்தியாவை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளனர் என்பதை நிரூபிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.