புது டெல்லி: ஒடிசாவின் பல மாவட்டங்களில் மண்ணில் புதைந்துள்ள கனிமங்கள் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஆய்வு நடத்தியது. தியோகர், சுந்தர்கர், நபரங்பூர், கியோஞ்சர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய இடங்களில் தங்க தாதுக்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மயூர்பஞ்ச், மல்கன்ங்கிரி, சம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது. இதன் காரணமாக, ஒடிசா தங்கச் சுரங்கமாக மாறி வருகிறது. இங்கு 10 முதல் 20 மெட்ரிக் டன் தங்கம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒடிசாவின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதாக ஒடிசா சுரங்க அமைச்சர் மார்ச் மாதம் ஒடிசா சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக, இங்கு தங்கச் சுரங்கம் தோண்டுவதற்கான ஏலம் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு இந்தியா 700 முதல் 800 மெட்ரிக் டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.
நாட்டின் உள்நாட்டு தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1.6 டன்னாக மட்டுமே உள்ளது. ஒடிசாவில் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டால், இந்தியாவில் உள்நாட்டு தங்க உற்பத்தி அதிகரிக்கும். இறக்குமதியும் ஓரளவு குறையும்.