சென்னை: G7 என்பது உலகின் வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் குழுவாகும், அதாவது பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா. ஐரோப்பிய ஒன்றியம் (EU), IMF, உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் இதில் பங்கேற்கின்றன. G7 கனடா 7 தென்னாப்பிரிக்கா, உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியா கனடாவின் அழைப்புகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியா இன்னும் அழைக்கப்படவில்லை.
பிரதமர் மோடி உச்சி மாநாட்டைத் தவிர்க்க இருப்பது இதுவே முதல் முறை. ஜூன் 15-17 வரை கனடாவில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டிற்கு இந்தியாவுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை, மேலும் அழைக்கப்பட்டாலும் இந்திய தரப்பு கலந்து கொள்ள விரும்பவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, பிரதமர் மோடி கனடாவுக்குச் சென்றால், தீர்க்கப்பட வேண்டிய பல பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கனடா இந்தியாவுக்கு எதிராகத் திரும்பத் தொடங்கியுள்ளது.

முக்கியமாக, கனடா காலிஸ்தானிகளுக்கு இடம் கொடுத்து வருகிறது. காலிஸ்தானி இந்தியாவிலிருந்து காலிஸ்தான் என்ற நாட்டை உருவாக்க போராடுகிறது. கனடா இதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கனடாவில் அரசாங்கம் மாறினாலும்.. புதிய பிரதமர் மார்க் கூட இந்தியாவுக்கு எதிரானவர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பின்னால் இந்திய அரசு இருக்கலாம் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தக் கொலையை இந்தியர்கள் செய்திருக்கலாம். கொலைக்குப் பின்னால் அவர்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். இந்தக் கொலையை இந்திய முகவர்கள் செய்திருக்கலாம் என்று தனது நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக அவர் கூறினார். தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இதை நம்புவதற்கு காரணம் உள்ளது. கனடா மண்ணில் ஒரு கனேடிய குடிமகனைக் கொன்றதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் தலையீடு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். இது சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்று கனடா தெரிவித்துள்ளது.
போவதில்லை கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான மிக மோசமான உறவுகள் காரணமாக வரவிருக்கும் G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி கனடாவுக்கு வருகை தருவது சாத்தியமில்லை. இந்த சூழ்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போரில் அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவை ஆதரிக்கவில்லை. இதேபோல், சீனாவும் துருக்கியும் அதற்கு எதிராகத் திரும்பியுள்ளன. பல நாடுகள் இந்தியாவை நேரடியாக ஆதரிக்கவில்லை. இப்போது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், ஜி7 கூட்டத்தில் கூட கலந்து கொள்ள முடியாது.