புது டெல்லி: உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் 20,324 மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டன. இதை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்த முகாம்கள் அக்டோபர் 2 வரை இரண்டு வாரங்களுக்கு நடைபெறும். இவற்றில், உடல் பரிசோதனைகள் மட்டுமல்லாமல், இரத்த பரிசோதனைகள் மற்றும் கடுமையான நோய்களுக்கான சிகிச்சை உள்ளிட்ட பிற சோதனைகளும் வழங்கப்படும்.
இந்த முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க முதல்வர் யோகி முடிவு செய்துள்ளார். இந்த முகாமின் ஒரு பகுதியாக, 507 இரத்த தான முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. தொடக்க விழாவில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

இந்த முகாம்களில், கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, குழந்தைகளுக்கான தடுப்பு பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதற்கான மாத்ரு வந்தனா திட்டம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புச் சட்டம் போன்ற பிரதமர் மோடியின் முயற்சிகள் இந்தியாவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளன.
எங்கள் அரசின் கடந்த 8 ஆண்டுகளில், 41 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், அமேதியில் ஒரு மருத்துவக் கல்லூரியும் திறக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.