புதுடெல்லி: ‘வளர்ந்த இந்தியாவை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு’ என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நிதி ஆயோக் சிறப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
நிகழ்வில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அபரிமிதமான விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு AI தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
AI தொழில்நுட்பமும் பல்வேறு சவால்களை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க விதிகள் வரையறுக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.