புதுடெல்லி: எஸ்ஆர்ஏஎம் மற்றும் எம்ஆர்ஏஎம் குழுமம், பிரடிக்கிம் பிச்சர்ஸ் உடன் இணைந்து தென்னிந்தியாவில் மெகா திரைப்பட நகரத்தை அமைக்க உள்ளது. இந்த நிறுவனங்கள் இணைந்து தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளன. இதுகுறித்து, லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எஸ்ஆர்ஏஎம் மற்றும் எம்ஆர்ஏஎம் குழுமத்தின் தலைவர் டாக்டர் சைலேஷ் எல்.ஹிரானந்தானி கூறியதாவது:-
தென்னிந்தியாவில் 50 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரத்தை தொடங்க உள்ளோம். இடம் விரைவில் அறிவிக்கப்படும். உலகத் தரம் வாய்ந்த ஸ்டுடியோக்கள், மேம்பட்ட விஎப்எக்ஸ் ஸ்டுடியோ மற்றும் உயர்தர டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோக்கள். சொகுசு முன்னோட்ட திரையரங்குகள் – டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் ஐந்து திரையரங்குகள். ஆடம்பரமான ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள்.
இதில் பத்து உயர்தர ரிசார்ட்டுகள், பிரபலங்கள் தங்குமிடம், திரைப்படக் குழுவினருக்கான 100 அறைகள், பொழுதுபோக்கு மற்றும் நிகழ்வு இடங்கள், ஒரு ஓட்டல், பப், மாநாட்டு அரங்குகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களுக்கான அதிநவீன இடம் ஆகியவை இடம்பெறும் என்றார். பிரடிக்கிம் பிக்சர்ஸ் தலைவர் அரவிந்த் தர்மராஜ் கலந்து கொண்டார்.