புதுடெல்லி: கடந்த 2024-25 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4% அதிகரித்து ரூ.22.08 லட்சம் கோடியாக உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் விவரங்கள் மாதந்தோறும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டு மார்ச் மாத வசூலை விட 9.9% அதிகம்.

ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூலில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.38,100 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.49,900 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.95,900 கோடியும், ஜிஎஸ்டி வரியாக ரூ.12,300 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024-25 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூலில் 9.4% அதிகரித்து ரூ. 22.08 லட்சம் கோடி. இதில், ரீபண்ட்கள் தவிர்த்து நிகர ஜிஎஸ்டி வசூல் ரூ. 19.56 லட்சம் கோடி.
இது முந்தைய நிதியாண்டின் வசூலை விட 8.6% அதிகம். பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து ரூ. 1,84 லட்சம் கோடியாகவும், ஜனவரியில் 12.3% அதிகரித்து ரூ. 1.96 லட்சம் கோடி. இதன் மூலம், 2024-25 நிதியாண்டின் 4-வது காலாண்டில் ஜிஎஸ்டி வசூல் 10.4% அதிகரித்து ரூ. 5.8 லட்சம் கோடியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.