புது டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:- மக்கள்தொகை வளர்ச்சி ஒருபுறம் சொத்தாகவும் மறுபுறம் சுமையாகவும் கருதப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பெற்றோரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேசிய அளவில், இந்து குடும்பங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில், பிற சமூகங்களில் பிறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. மத மாற்றத்தால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மத மாற்றம் அனுமதிக்கப்படுவதில்லை. மத்திய அரசின் அனைத்து விஷயங்களிலும் ஆர்எஸ்எஸ் முடிவுகளை எடுக்கிறது என்பது மிகவும் தவறான கருத்து.

நாங்கள் ஆலோசனை மட்டுமே வழங்குகிறோம். அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அந்த வயதில் ஓய்வு பெறுவது கட்டாயமில்லை. அவர்கள் 80 வயதில் ஆர்எஸ்எஸ்-ஐ வழிநடத்த வேண்டும் என்று வற்புறுத்தினால், நான் நிச்சயமாக அதை ஏற்றுக்கொள்வேன்.
ஆர்எஸ்எஸ் என்ன சொன்னாலும், நான் அதைச் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.