
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் சோதனைப் பாதை சென்னையில் உருவாக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். ரயில்கள் இந்தியாவின் போக்குவரத்துக்கு முதுகெலும்பு. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ரயில் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.
அதன்படி, கடந்த பத்தாண்டுகளில் இந்திய ரயில்வே பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி, நாட்டில் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேக் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் ரயில்வேக்கு மட்டுமின்றி நாட்டிற்கும் ஒரு அடையாளமாக மாறியுள்ளது. தற்போது இருக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வரும் நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மறுபுறம், இந்தியாவில் ஹைட்ரஜன் ரயிலும் இயக்க தயாராகி வருகிறது. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில் போக்குவரத்தில் ஒரு முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது, ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் ஹைப்பர்லூப் ரயில் சோதனை தடத்தை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் மின்னல் வேக ஹைப்பர்லூப் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.
இதற்கான தீவிர சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் 410 மீட்டர் நீளமுள்ள ஹைப்பர்லூப் சோதனை பாதையை வடிவமைத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அஷ்வினி வைஷ்ணவ், “இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதை (410 மீட்டர்) நிறைவடைந்துள்ளது. ரயில்வே துறை மற்றும் ஐஐடி மெட்ராஸ் குழு இணைந்து இந்த பாதையை உருவாக்கியுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் குழு மற்றும் ஸ்டார்ட்அப் TuTr ஹைப்பர்லூப் இணைந்து நாட்டின் அதிவேக ரயிலை உருவாக்கி வருகிறது. ஹைப்பர்லூப் ரயில் என்பது நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேகத்தில் பயணிக்கக்கூடிய ஒரு ரயில் ஆகும். ஹைப்பர்லூப் ரயில் மணிக்கு 1,100 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்பதால் அதன் வேகத்தை கற்பனை செய்து பாருங்கள்.
இந்த ரயிலை இந்தியாவில் மணிக்கு 360 கிமீ அல்லது நொடிக்கு 100 மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் இந்த ரயில் சென்னை – திருச்சி இடையிலான தூரத்தை வெறும் 1 மணி நேரத்தில் கடக்கும். இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் மும்பை மற்றும் புனே இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இயக்கப்பட்டால் மும்பை-புனே இடையிலான பயண நேரம் வெறும் 25 நிமிடங்களாக குறைய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.