தகோத்: குஜராத் மாநிலம் தகோத் உள்ள ரயில்வே இன்ஜின் தொழிற்சாலையில், 9,000 குதிரைத்திறன் கொண்ட நவீன மின்சார இன்ஜின் தயாரிக்கப்படுகிறது. இந்த இன்ஜின் 5,000 டன் எடையுள்ள சரக்கு பெட்டிகளை 100 கிமீ வேகத்தில் இழுக்கும். இப்பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அவர் அளித்த பேட்டியில், “இந்த நவீன 9,000 குதிரைத்திறன் கொண்ட இன்ஜின் அடுத்த 30 முதல் 40 நாட்களில் அறிமுகப்படுத்தப்படும்.
இரயில்வேக்கு சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல சக்திவாய்ந்த இன்ஜின் தேவை. 2020-ம் ஆண்டில், பீகாரில் உள்ள மின்சார இன்ஜின் தொழிற்சாலையில் 12,000 குதிரைத்திறன் கொண்ட இரட்டை இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது, 9,000 குதிரைத்திறன் திறன் கொண்ட ஒரு இன்ஜின் தயாரிக்கப்படுகிறது.