புதுடெல்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலனுக்காக EPFO 3.0 என்ற புதிய வரைவுக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு கொள்கை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. தற்போது பிஎப் பணம் எடுக்கும் நடைமுறை மிகவும் கடினமாக உள்ளதாக பலரும் புகார் தெரிவித்துள்ளதால், வங்கிகள் போன்ற ஏடிஎம் மையங்களில் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், யுபிஐ மூலம் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். யுபிஐ அல்லது ஏடிஎம் மூலம் ஒரே நேரத்தில் பிஎஃப் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். இந்தப் பணப் பரிமாற்றங்களுக்கு நீங்கள் விரும்பும் வங்கிக் கணக்கையும் தேர்வு செய்யலாம். தற்போது, வீடு கட்டுதல், கல்வி மற்றும் திருமணம், சுகாதாரம் போன்ற காரணங்களை கூறி மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க முடியும்.
எதிர்காலத்தில், காரணங்களை வழங்குவது எளிதாக இருக்கும். இந்தத் தகவலை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாத இறுதிக்குள் பிஎஃப் உறுப்பினர்கள் விரைவில் யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியும் என்று அவர் கூறினார்.