புதுடெல்லி: மேற்கு வங்காளத்தின் துர்காபூரில் ஒரு கும்பல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடியது. இது குறித்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம், “மாணவி மீதான பாலியல் வன்கொடுமை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
அதே நேரத்தில், நேற்று இரவு 12.30 மணிக்கு அவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு எப்படி வெளியேறினர்?” என்று கூறினார்.

இது தொடர்பாக, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று எக்ஸ் பக்கத்தில், “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை முதல்வர் மம்தா விமர்சித்துள்ளார்.
பாஜக முதல்வர் ஒருவர் அத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், என்ன நடக்கும் என்று பார்ப்போம். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதிக்கும். ஊடகங்கள் கூட இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றன.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.