புதுடில்லி: வெளிநாடுகளில் வேலை செய்து தாயகத்துக்கு பணம் அனுப்பும் இந்தியர்களில், மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில், கேரளா இரண்டாம் இடத்தில் உள்ளன. இந்த தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன.
பேசிபி 2010-11 நிதி ஆண்டில் இந்தியர்கள் தாயகத்துக்கு அனுப்பிய பணம் 4.63 லட்சம் கோடியாக இருந்தது. இந்த தொகை 2023-24 நிதி ஆண்டில் 9.88 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

2020-21 நிதி ஆண்டில், கேரளா மாநிலத்தின் பங்கு 10.2 சதவீதமாக இருந்தது. கோவிட் தொற்றின் காரணமாக வெளிநாட்டில் பணியாற்றிய இந்தியர்கள் தாயகத்துக்கு திரும்பிய நிலையில், பணவரவு குறைந்திருந்தது. ஆனால், அடுத்த வருடங்களில், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதுடன், கேரளா மாநிலத்தின் பணவரவு சதவீதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
2023-24 நிதி ஆண்டில், கேரளாவைச் சேர்ந்தவர்கள் தாயகத்திற்கு 19.7 சதவீதம் பணம் அனுப்பியுள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலம் 20.5 சதவீத பணவரவுடன் முதலிடத்தில் உள்ளது, கேரளா இரண்டாம் இடத்தில், தமிழ்நாடு 10.4 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில், தெலுங்கானா 8.1 சதவீதத்துடன் நான்காம் இடத்தில், கர்நாடகா 7.7 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்தில் உள்ளன.
மேலும், எந்த நாடுகளில் இருந்து இந்தியர்கள் பணம் அனுப்புகிறார்கள் என்பதைப் பற்றியும் ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, 27.7 சதவீதம் அமெரிக்காவில் இருந்து, 19.2 சதவீதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, 10.8 சதவீதம் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு பணம் வந்துள்ளது.