கொல்கத்தா: பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் அதிகாரமளிப்பு பேரணியை நடத்துகிறார்.
திரிணமூல் காங்கிரஸ் சார்பாக இன்று பீகாரில் நடைபெறும் கடைசி பேரணியில் யூசப் பதான் மற்றும் லலிதேஷ் திரிபாதி பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

பீகாரில் நடைபெறும் வாக்காளர் அதிகாரமளிப்பு பேரணியில் ராகுலுக்கு அடுத்த தலைவராக மம்தா இருக்க விரும்பவில்லை. அதனால்தான் கட்சியின் சார்பாக மற்றவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க ராகுல் போராடுகிறார். இந்தப் போராட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ், “பீகார் பேரணிக்கு யாரை அனுப்புவது என்பது எங்கள் முடிவு. “இந்த யாத்திரைக்கு மம்தாவுக்கு ஏற்கனவே ஆதரவு உள்ளது. அதனால்தான் எங்கள் கட்சியிலிருந்து இரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம்” என்று அவர் கூறினார்.