சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே 14 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டான். இதுதொடர்பாக 2 பெண்களிடம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த சஹிரா பேகம், கடந்த 12-ம் தேதி தனது இரண்டு மகன்களான 6 வயது மற்றும் 3 வயது குழந்தைகளுடன் வேலை தேடி சென்னை சென்ட்ரலுக்கு வந்து பயணிகள் காத்திருக்கும் இடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது இவரது மூத்த மகன் ஷாகிப் உதீன் (6) காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த சஹிரா பேகம் ரயில் நிலையத்தில் பல இடங்களில் மகனைத் தேடினார்.

ஆனால், சிறுவன் கிடைக்காததால், ரயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டது. தமிழ்நாடு ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் இணைந்து சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வட மாநிலத்திற்கு புறப்பட்ட ரயிலில் சில பெண்கள் சிறுவனை ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள நசரத்பேட்டையில் இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சென்ட்ரல் ரயில்வே சிறப்பு போலீசார் விரைந்து வந்து சிறுவனை மீட்டு சென்னை சென்ட்ரல் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, சாஹிராபேகத்துக்கு தகவல் தெரிவித்து, காவல் நிலையத்துக்கு வரவழைத்து, வாலிபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும், சிறுவனை அழைத்துச் சென்றது தொடர்பாக சரஸ்வதி, சஜ்ஜாவதி ஆகிய இரு பெண்களிடம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.