By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஒரே இரவில் உக்ரைனில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசிய ரஷ்யா..!!
    1 Min Read
    தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது…!!
    1 Min Read
    டிரினிடாட் மற்றும் டொபேகோ பிரதமருக்கு கும்பமேளா புனித நீர் பரிசளிப்பு..!!
    1 Min Read
    உக்ரைனுடனான போரை புடின் முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பில்லை: டொனால்ட் டிரம்ப்
    1 Min Read
    வான்வெளியை மீண்டும் திறந்த ஈரான்.. விமானங்கள் மீண்டும் தொடக்கம்..!!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்யலாம்?
    2 Min Read
    மகிழ்ச்சியை மட்டும் எதிர்பார்ப்பது திருமண வாழ்க்கையா?
    2 Min Read
    மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பரவல்..!!
    2 Min Read
    வேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இழப்பீடு கோர முடியாது: உச்ச நீதிமன்றம்
    1 Min Read
    குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்கு அபராதம் இல்லை: இந்தியன் வங்கி..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை ஆன்லைனில் எளிதாகத் திறக்க பஞ்சாப் நேஷனல் வங்கியின் புதிய சேவை
    2 Min Read
    மதுரை முருகன் மாநாட்டில் நிகிதா பங்கேற்பு மற்றும் மோசடி விவகாரம்
    1 Min Read
    தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
    1 Min Read
    ரிதன்யா வழக்கில் காங்கிரஸ் தலையிடாது – பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தருவோம்: செல்வப்பெருந்தகை
    1 Min Read
    பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை – தவெக தலைவர் விஜய் உறுதிபட அறிவிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது: மோடி பெருமிதம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது: மோடி பெருமிதம்
இந்தியா

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது: மோடி பெருமிதம்

Periyasamy
Last updated: April 12, 2025 8:51 am
By Periyasamy 3 Min Read
Share
SHARE

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, ​​ரூ.3,880 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கடந்த 10 ஆண்டுகளில் வாரணாசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக நகரின் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் அதிகரித்துள்ளன. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாரணாசி மட்டுமின்றி பூர்வாஞ்சல் பகுதி முழுவதும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத கொள்கையுடன் மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் அயராது உழைத்து வருகின்றன. லக்ஷாதிபதி சூத் யோஜனா மூலம் பூர்வாஞ்சல் பெண்கள் முழு பலன்களைப் பெறுகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் பூர்வாஞ்சல் பகுதியில் பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்படுகிறது.

ஒரு காலத்தில், பூர்வாஞ்சல் பகுதி மக்கள் உயர் சிகிச்சைக்காக டெல்லி மற்றும் மும்பை செல்ல வேண்டியிருந்தது. இப்போது வாரணாசி நாட்டின் சுகாதார தலைநகரமாக உருவெடுத்துள்ளது. அனைத்து மேம்பட்ட சிகிச்சைகளையும் இங்கே பெறலாம். ஒரு காலத்தில் ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வீடு, நிலங்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போது சிகிச்சைக்காக யாரும் நிலத்தை விற்க வேண்டியதில்லை. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர்.

இதன் காரணமாக தற்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாரணாசியின் வளர்ச்சியை கண்டு வியப்படைகின்றனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், அகலமான சாலைகள், கங்கை நதியில் அழகான படிகள் என வாரணாசி முற்றிலும் மாறிவிட்டது. வாரணாசி மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளும் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரம் தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு, மேக் இன் இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிக புவியியல் குறியீடுகளைப் பெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் தாரக மந்திரம். இதை கருத்தில் கொண்டு காசி தமிழ் சங்க நிகழ்ச்சி வாரணாசியில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டின் ஒற்றுமை வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் (சோனியா காந்தி) நலனுக்காக மட்டுமே அரசு நடத்தப்பட்டது. மத்தியில் ஆட்சியை பிடிக்க பல்வேறு சதிகள் அரங்கேறின. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களின் நலனுக்காக அயராது உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மதியம், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அசோக் நகர் பகுதியில் உள்ள இசாகர் குருஜி மகராஜ் கோவிலுக்கு சென்றார். அங்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மார்ச் 29-ம் தேதி காணாமல் போனார். 7 நாட்களுக்குப் பிறகு உடல் நலிவுற்ற நிலையில் வீடு திரும்பினார். இந்த ஒரு வாரத்தில் மாணவிக்கு சிலர் போதை மருந்து கொடுத்துள்ளனர்.

அப்போது மாணவியை 23 பேர் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து வாரணாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களை அளிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வாரணாசி விமான நிலையத்தில் பிரதமர் மோடியிடம் மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம், வாரணாசி போலீஸ் கமிஷனர் மோகித் அகர்வால் ஆகியோர் விரிவான விளக்கம் அளித்தனர்.

கமிஷனர் மோகித் அகர்வால் கூறுகையில், “முக்கிய குற்றவாளி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்” என்றார். தவறு செய்தவர்கள் தப்பக்கூடாது என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

You Might Also Like

உடைந்து போன நம்பிக்கையை மீண்டும் பெற என்ன செய்யலாம்?

மகிழ்ச்சியை மட்டும் எதிர்பார்ப்பது திருமண வாழ்க்கையா?

மீண்டும் கேரளாவில் நிபா வைரஸ் பரவல்..!!

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இழப்பீடு கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காததற்கு அபராதம் இல்லை: இந்தியன் வங்கி..!!

TAGGED:EducationprogramVaranasiகாசி தமிழ் சங்கமம்நிகழ்ச்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

பறந்து போ படம்: ரசிகர்களின் பாராட்டுகள் மற்றும் விமர்சனங்கள்

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?